மேகாலயா நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள் : மீட்பு பணி தீவிரம்

மேகாலயா மாநிலத்தில் வெள்ளப்பெருக்கு காரணமாக நிலக்கரி சுரங்கத்தில் சிக்கியுள்ள பணியாளர்களை மீட்கும் பணி 18ஆவது நாளாக தொடர்கிறது.
மேகாலயா நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள் : மீட்பு பணி தீவிரம்
x
மேகாலயா மாநிலத்தில் வெள்ளப்பெருக்கு காரணமாக நிலக்கரி சுரங்கத்தில் சிக்கியுள்ள பணியாளர்களை மீட்கும் பணி 18ஆவது நாளாக தொடர்கிறது. 370 அடி ஆழ சுரங்கத்தில் சிக்கியுள்ள 15 தொழிலாளர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் குழு மற்றும் கடற்படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். கடற்படை வீரர்கள் சுரங்கத்திற்குள் சென்றுள்ளதாகவும், அந்த முயற்சி பலன் அளிக்கவில்லை என்றால், பம்புகள் மூலம் சுரங்கத்தில் இருந்து வெள்ளநீரை வெளியேற்ற முடிவு செய்துள்ளதாகவும் மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்