கண்டிப்பாக சபரிமலைக்குச் செல்வோம் : பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை - மனிதி அமைப்பு ஒருங்கிணைப்பாளர் செல்வி

சபரிமலை சென்றுள்ள பெண்களை தடுத்து பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பம்பையில் மீண்டும் பரபரப்பு நிலவுகிறது.
x
சபரிமலை சென்றுள்ள பெண்களை தடுத்து பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பம்பையில் மீண்டும் பரபரப்பு நிலவுகிறது. சென்னை மனிதி என்ற அமைப்பை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட பெண்கள்,  சபரிமலைக்கு செல்வதாக அறிவித்திருந்தனர். இந்த நிலையில், அவர்கள் தற்போது பம்பை வரை சென்று விட்டனர். அங்கு கூடியிருந்த அய்யப்ப பக்தர்கள் அவர்களை தடுத்து சரண கோஷங்களை எழுப்பி வருகின்றனர். இதற்கிடையே, சபரிமலைக்கு அழைத்து செல்லும் வரை போராட்டம் தொடரும் என மனிதி அமைப்பினர் தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்