``கர்ப்பமாக்கி.. வாழ்க்கையை சீரழித்த இயக்குனர்..'' - பிரபல நடிகையின் பதிவால் பற்றியெரியும் டோலிவுட்

x

பிரபல தெலுங்கு இயக்குநர் ஒருவர், நடிகையை கர்ப்பமாக்கி சினிமா வாழ்க்கையை சீரழித்துவிட்டதாக நடிகை பூனம் கவுர் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

தமிழில் நெஞ்சிருக்கும் வரை, பயணம், வெடி, என் வழி தனிவழி, நாயகி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பூனம் கவுர், சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், தெலுங்கு இயக்குனர் ஒரு நடிகையை கர்ப்பமாக்கி அந்த பெண்ணின் சினிமா வாழ்க்கையை நாசம் செய்ததாக பதிவிட்டுள்ளார். இந்த கொடூரமான இந்த விஷயத்தில் தெலுங்கு நடிகர் சங்கம் தலையிட்டு பாதிக்கப்பட்ட அந்த பஞ்சாபி நடிகைக்கு கொஞ்சம் உதவி செய்தது என்றும் குறிப்பிட்டுள்ளார். இயக்குனர் பெயரை அவர் தெரிவிக்கவில்லை. சமீபத்தில் நடிகர் பவன் கல்யாண் உள்ளிட்டோர் மீது நடிகை பூனம் கவுர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்