தமிழகத்தை பரபரப்பாக்கிய சம்பவத்தின் நிஜ கதை.. வேட்டையன் இயக்குநர் அப்டேட்

x

தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஜீவஜோதி சாந்தகுமாரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக உள்ளது. உணவக உரிமையாளர் ராஜகோபால் - ஜீவஜோதி வழக்கை அடிப்படையாக கொண்டு படம் உருவாகவுள்ளது.

ஜீவஜோதியின் கதையை படமாக உருவாக்கும் உரிமையை பெற்றுள்ள ஜங்க்லீ பிக்சர்ஸ் நிறுவனம், இந்த படத்தை ஜெய்பீம் பட இயக்குநர் ஞானவேல் இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. பல்வேறு மொழிகளில் உருவாகவுள்ள இந்த திரைப்படத்திற்கு 'தோசா கிங் மசாலா அன்ட் மர்டர்ஸ்' என பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது ரஜினி நடித்துள்ள வேட்டையன் படத்தின் வெளியீட்டை அடுத்து, ஞானவேல் இந்த படத்தை இயக்கவுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்