பாலியல் தொந்தரவு கொடுத்த நடிகர் பெயரை ப்ரஸ்மீட்டில் சொன்ன நடிகை `இவரா..' அதிர்ச்சியில் ரசிகர்கள்

x

படப்பிடிப்பின்போது தன்னிடம் தவறாக நடந்து கொண்ட‌து நடிகர் ஜெய்சூர்யா என்று மலையாள நடிகை சோனியா மல்கர் தெரிவித்துள்ளார். மலையாள திரைத்துறையினர் மீது அடுத்தடுத்து பாலியல் குற்றச்சாட்டுகளை நடிகைகள் தெரிவித்து வரும் நிலையில், நடிகை சோனியா மல்கரும் தனக்கு பாலியல் சீண்டல் நடந்த‌தாக தெரிவித்திருந்தார். யார் அந்த நபர் என்பதை இன்று தெரிவிப்பதாக கூறியிருந்த நிலையில், திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த‌து நடிகர் ஜெய்சூர்யா என்றும், அன்றைய தினமே தன்னிடம் அவர் மன்னிப்பு கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்