ரூ.1400 கோடி... ஸ்ரேயா கோஷலுக்கும் ட்ரூ காலருக்கும் இப்படி ஒரு பந்தமா..? - வெளியான அசத்தல் தகவல்

x

பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷலின் கணவரான சிலாதித்யா, ட்ரூ காலர் நிறுவனத்தின் உலகளாவிய தலைவர் என்ற வியப்பூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு மட்டுமன்றி இந்திய திரைத்துறையில் பிரபல பாடகியாக வலம் வரும் அவர், 2015ல் சிலாதித்யாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2021ல் மகன் பிறந்தார். இந்நிலையில் ட்ரூ காலர் செயலியின் நிறுவனத்தின் உலகளாவிய தலைவராக பதவி வகிக்கும் நிலையில், இந்த செயலியை சுமார் 374 மில்லியன் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் ஆண்டு தோறும் உயரத்தை நோக்கி செல்லும் இந்த நிறுவனம், கடந்த ஆண்டில் மட்டும் ஆயிரத்து 400 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. இதனை சுட்டிக்காட்டியுள்ள பலரும் ஆயிரத்து 400 கோடி வருவாய் ஈட்டும் நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக பதவி வகிக்கும் ஸ்ரேயா கோஷலின் கணவரை பாராட்டி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்