பிரபல ஸ்டார் நடிகருக்கு கொலை மிரட்டல் - பரபரப்புக்கு நடுவே திடீர் திருப்பம்

x

பிரபல ஸ்டார் நடிகருக்கு கொலை மிரட்டல் - பரபரப்புக்கு நடுவே திடீர் திருப்பம்

பாலிவுட் நடிகர் சல்மான் கானிடம் 5 கோடி ரூபாய் கேட்டு மர்ம நபர் வாட்ஸ் அப் மூலம் கொலை மிரட்டல் விடுத்த நிலையில், தவறுதலாக அனுப்பிவிட்டதாகவும், அதற்காக மன்னிப்பு கோருவதாகவும் போலீசாருக்கு மற்றொரு தகவல் வந்துள்ளது.

மும்பை போக்குவரத்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த 18ம் தேதி வாட்ஸ் மூலம் வந்த தகவலில், கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் உடனான பிரச்சனையை தீர்க்க, நடிகர் சல்மான் கான் 5 கோடி ரூபாயை தர வேண்டும் என்றும், இல்லாவிட்டால் பாபா சித்திக்கிற்கு ஏற்பட்டதைவிட மோசமான நிலை ஏற்படும் என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், மும்பை போலீஸ் வாட்ஸ் அப்பிற்கு, ஏற்கனவே வந்த எண்ணில் இருந்து மர்ம நபர் மீண்டும் மெசேஜ் அனுப்பியுள்ளார். அதில், தவறுதலாக தான் மெசேஜ் அனுப்பிவிட்டதாகவும், அதற்காக மன்னிப்பு கோருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜார்கண்டில் இருந்து இந்த மெசேஜ் வந்துள்ளதை போலீசார் கண்டுபிடித்துள்ள நிலையில், அதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்