சேலத்தில் வாசல் வரை வந்து ஓடிய டவுசர் கும்பல்.. சிக்கிய 2 பேர்

x

சேலத்தில் வாசல் வரை வந்து ஓடிய டவுசர் கும்பல்.. சிக்கிய 2 பேர்

ஆத்தூரில் முகமூடி அணிந்து கொள்ளையடிக்க சென்ற 2 டவுசர் கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தங்கவேல் என்பவரது வீட்டில், 4 பேர் முகமூடி மற்றும் டவுசர் அணிந்து கொள்ளையடிக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது வீட்டில் மின்விளக்கை ஆன் செய்ததால், 4 கொள்ளையர்களும் தப்பிச் சென்றுள்ளனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து தேடிவந்த போலீசார், செல்லமுத்து மற்றும் அருள்ராஜ் ஆகிய இருவரை கைது செய்தனர். விசாரணையில் தூத்துக்குடி, திண்டுக்கல், சாத்தான்குளம், தேவக்கோட்டை உள்ளிட்ட பல ஊர்களில் இவர்கள் முகமூடி அணிந்து கொள்ளை அடித்ததும், 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்