"மலர் மீது கொண்ட பிரேமம்.." இன்றும் கொண்டாடுவதன் காரணம் இது தான்

x

மலையாளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற "பிரேமம்" திரைப்படம் வெளியாகி 9 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளன. கடந்த 2015-ஆம் ஆண்டில் அல்ஃபோன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி, சாய் பல்லவி, அனுபமா, மடோனா செபாஸ்டின் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான "பிரேமம்" மலையாளம் மட்டுமன்றி அனைத்து மொழி ரசிகர்களையும் கவர்ந்தது. ராஜேஷ்முருகன் இசை யில் பிரேமம் படத்தின் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தது. அதிலும், மலரே நின்னை காணாதிருந்தால் பாடல் இன்றும் ரசித்து கேட்கப்படுகிறது. டீன் ஏஜில் தொடங்கிக் கல்லூரிப் பருவம் , கல்லூரிக்குப் பிந்தைய வாழ்க்கை என 3 காலங்களில் ஒரு ஆணுக்கு ஏற்படும் வெவ்வேறு காதல் அனுபவங்களை எதார்த்தமான காட்சிகள் மூலம் காட்சிப்படுத்தியிருப்பார் அல்ஃபோன்ஸ் புத்ரன். தமிழ் பேசும் டீச்சராக மலர் கதாபாத்திரத்தில் சாய் பல்லவி இயல்பாக நடித்திருந்தார்.


Next Story

மேலும் செய்திகள்