நிவின்பாலி மீதான பாலியல் புகாரில் திருப்பம்.. கிடைத்த முக்கிய ஆதாரம்

x

கேரள நடிகர் நிவின் பாலி மீதான பாலியல் புகார் பொய்யானதாக என்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. பட வாய்ப்பு தருவதாக கூறி, வெளிநாட்டில் வைத்து நிவின்பாலி உள்ளிட்ட சிலர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் பெண் ஒருவர் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், நிவின்பாலி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், வெளிநாட்டில் வைத்து பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறப்படும் 2023ம் ஆண்டு டிசம்பர் 15-ம் தேதி நிவின் பாலி கொச்சியில் தங்கியிருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழக்குத் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் போலீசார், கொச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் நிவின் பாலி தங்கியிருந்தற்கான ஆதாரங்களை சேகரித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன...


Next Story

மேலும் செய்திகள்