"வாழை" - உறுதியளித்த மாரி செல்வராஜ் | Vaazhai | Mari Selvaraj

x

வாழை திரைப்படத்தின் இரண்டாம் பாகம் நிச்சயம் வெளிவரும் என இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் வாழை திரைப்படத்தின் 25 ஆம் நாள் வெற்றி விழா நடைபெற்றது. இதில் படத்தில் பணிபுரிந்த அனைத்து கலைஞர்களும் பங்கேற்றனர். அவர்களுக்கு இயக்குநர் மாரி செல்வராஜ் நினைவு பரிசினை வழங்கினார். இதனையடுத்து மேடையில் பேசிய அவர், என்னிடம் ஏராளமான கதைகள் உண்டு... அனைத்தையும் சொல்லிவிட்டு தான் போவேன்... நான் போன பின், என்னால் உருவாக்கப்பட்டவர்கள் இந்த பயணத்தை தொடர்வார்கள் என தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்