"அட்ஜஸ்ட் செய்ய சொல்லி தொந்தரவு.." - உடைந்து அழுத கல்லூரி முதல்வர்

x

மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர் கல்வி கல்லூரி ஒன்றில் முதல்வராக பணிபுரிந்துவரும் பெண் ஒருவர், தென்மண்டல காவல்துறை தலைவர் பிரேம் ஆனந்த் சின்ஹாவிடம் புகார் மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆசிரியர் கல்வி பல்கலைகழக முன்னாள் பதிவாளர் ராமகிருஷ்ணன் என்பவர், Adjust செய்ய வேண்டும் என கூறி தொந்தரவு அளித்த‌தாக குற்றம் சாட்டினார். மேலும், தன்னை பற்றி வாட்ஸ்அப் குழுக்களில் புகைப்படத்துடன் தவறான தகவல்களை பகிர்ந்துவருவதாகவும், ராமகிருஷ்ணன் மீது, தான் அளித்த புகாரை வாபஸ் பெற கூறி பல்வேறு தரப்பினர் மூலமாக மிரட்டல் அளித்துவருவதாகவும் வேதனை தெரிவித்தார். இதனால், தகுந்த நடவடிக்கை எடுத்து தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்