கேரளாவில் அடுத்த அதிர்ச்சி... `பெண் திரைப்பட தயாரிப்பாளரிடம்..' - 9 பேர் மீது பாய்ந்த வழக்கு

x

கேரளாவில் திரைபடத் துறையில் பாலியல் புகார்கள் தொடர்பாக கேரளா அரசால் அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணை குழு விசாரணை மேற்கொண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பெண் திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் திரைப்பட தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட ஒன்பது பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திரைப்பட துறையில் உள்ள பிரச்சனை தொடர்பாக கேரள தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்த போது, தன்னிடம் அவமரியாதையாக நடந்து கொண்டதாக பெண் தயாரிப்பாளர் சிறப்பு விசாரணை குழுவிடம் புகார் அளித்தார். புகார் மீது விசாரணை மேற்கொண்ட சிறப்பு விசாரணை குழுவின் அறிவுறுத்தலின் பேரில், எர்ணாகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் ஆன்றோ ஜோசப், தயாரிப்பாளர்கள் லிஸ்டின் ஸ்டீபன், ராகேஷ் உள்ளிட்ட 9 பேர் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்