கேரளாவை பதற்றமாக்கிய பாலியல் புகார்கள்.. நீதிமன்றம் படியேறிய நடிகர்கள்

x

கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கையை தொடர்ந்து பிரபல நடிகர்கள் மீது பாலியல் புகார்கள் பதிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட நடிகர்கள் முன்ஜாமின் கோரி நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்...

ஹேமா கமிட்டியில் மலையாள நடிகைகள் பலர் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, பலரும் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல் குறித்து பொதுவெளியில் கூறி வருகின்றனர். அதன்படி, பிரபல நடிகர்களான சித்திக், ஜெயசூர்யா, இடைவேள பாபு மற்றும் எம்.எல்.ஏ-வும், நடிகருமான முகேஷ் ஆகியோர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதைத் தொடர்ந்து, குற்றஞ்சாட்டப்பட்ட நான்கு பேரும் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளனர். இவர்களில் எம்.எல்.ஏ-வாக பதவி வகித்து வரும் முகேஷ், முதலமைச்சரை சந்தித்து தன்னிலை விளக்கம் அளித்துள்ளதாக தெரிகிறது. மேலும், திருவனந்தபுரம் மற்றும் கொல்லம் பகுதிகளில் உள்ள முகேஷின் வீடுகளுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்