``ஆர்த்தியின் கொடுமைகள் - சைலன்ட் கில்லராக இருந்த மாமியார்..''- மொத்தமாக போட்டு உடைத்த ஜெயம் ரவி

x

ஜெயம் ரவி-ஆர்த்தி இடையிலான விவாகரத்து இணையத்தில் பேசு பொருளாகியுள்ள நிலையில், தன்னை வீட்டு பணியாட்களை விட மோசமாக நடத்தியதாக ஜெயம் ரவி வேதனை தெரிவித்துள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. இதன் பின்னணியை பார்க்கலாம் விரிவாக

கோலிவுட் வட்டாரத்தை மட்டுமன்றி..இணையவாசிகளையும் அதிர்ச்சியுறச் செய்தது, ஜெயம் ரவி ஆர்த்தி தம்பதியின் விவாகரத்து செய்தி..

இருவரின் பிரிவு தொடர்பான செய்தி வெளியான போதே, நட்சத்திர தம்பதியின் பிரிவு குறித்து பல வதந்திகள் பரவி வந்த சூழலில், இரு தரப்பில் இருந்து மாறி மாறி வெளியான தகவல்கள் இவ்விவகாரத்தை பேசு பொருளாக்கியது..

ஆர்த்தியை விட்டு பிரிவதாக ஜெயம் ரவி எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டதன் பின், தானும் குழந்தைகளும் தவிப்பதாக ஆர்த்தி வெளியிட்ட பதிவு, விவாதத்தையே கிளப்பின...

இதற்கிடையில், ஜெயம் ரவி ஆர்த்தி பிரிவுக்கு பாடகி கெனிஷா ஃப்ரான்சிஸ் காரணம் என கூறப்பட்ட நிலையில், தானும் ரவியும் நல்ல நண்பர்கள் என விளக்கமளித்த கெனிஷா, ஜெயம் ரவிக்கு அவர் மனைவி செய்ததெல்லாம் கொடுமை எனப் பேசியிருந்தார்.

இந்நிலையில் தான் நடிகர் ஜெயம் ரவியே தனது விவாகரத்து குறித்து பேசியதாக பல தகவல்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் வெளியானது.

திருமணமான 13 வருடங்களில் தனக்கென தனியாக வங்கி கணக்கு கூட இல்லையென கூறி ஜெயம் ரவி வேதனைப்பட்டதாகவும், தான் என்ன செலவு செய்தாலும் அது தனது மனைவி ஆர்த்திக்கு மெசெஜ்-ஆக சென்று விடும் என கூறியுள்ளார்..

ஆனால், ஆர்த்தி தனக்கென தனியாக 2,3 அக்கவுண்ட் வைத்துள்ளதுடன்..அவருக்கு வேண்டியபடி செலவும் செய்து கொள்வார் என ஆதங்கப்பட்டாராம் ஜெயம் ரவி..

இவையனைத்தையும் பொறுத்துக் கொண்டிருந்த தன்னை கொதித்தெழ செய்ததே தனது மாமியாருக்கு நடித்து கொடுத்த படங்களே எனவும் கூறியுள்ளாராம்...

தனது மாமியார் தயாரிப்பில், அடங்க மறு, பூமி, சைரன் உள்ளிட்ட படங்கள் நடித்து கொடுத்த சூழலில், 3 படங்களிலும் நஷ்டம் மட்டுமே ஏற்பட்டதாக கூறியதாகவும், ஆனால் கணக்குப்படி பார்த்தால் லாபமே ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது..

லாபம் கண்ட படங்களை நஷ்டம் எனக் கூறியது ஏன் ? எனத் தொடங்கிய பிரச்சனை தான் விவாகரத்து வரை ஏற்பட காரணம் என கூறப்படுகிறது..

ஆர்த்தியை விட்டு பிரிந்த பின் நண்பர்கள் வீட்டிற்கு கூட செல்ல முடியாமல் நெருக்கடி கொடுத்ததாகவும், பணியாட்களுக்கு கிடைத்த மரியாதை கூட தனக்கு கிடைக்கவில்லை என வருத்தப்பட்டிருக்கிறாராம் ஜெயம் ரவி...


Next Story

மேலும் செய்திகள்