``சுயநலவாதி.. கர்மா சும்மா விடாது'' - காதல் கைகூட காரணமான குஷ்புவுக்கே வந்த பயங்கர கோபம்

x

ஜெயம் ரவி - ஆர்த்தி... யார் பக்கம் தவறு? காதல் கைகூட காரணமான குஷ்புவுக்கே வந்த பயங்கர கோபம்

நடிகர் ஜெயம் ரவி-ஆர்த்தி காதல் திருமணம் நடைபெற பெரிதும் உதவியாக இருந்த நடிகை குஷ்பு தனது எக்ஸ் தள பக்கத்தில், "மனைவியை விட்டு செல்பவன் நல்ல மனிதனே அல்ல" என யாரையோ மறைமுகமாக தாக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

ஜெயம் ரவி-ஆர்த்தி காதல் திருமணத்திற்கு முதலில் சிக்கல் எழுந்த நிலையில்...குஷ்பு தான் பேசி சமாதானப்படுத்தி இரு குடும்பங்களையும் ஒன்றிணைத்து திருமணம் நடந்தேற உதவி புரிந்ததாக பேசப்பட்டது... இந்த சூழலில் 15 வருட திருமண உறவை முறித்துக் கொண்டு விவாகரத்திற்கு ஜெயம் ரவி விண்ணப்பித்தது அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்தது. ஜெயம் ரவி தன்னிச்சையாக முடிவு எடுத்துள்ளார் என்று கூறியிருந்தார் ஆர்த்தி. இந்த சூழலில், நடிகையும், பா.ஜ.க நிர்வாகியுமான குஷ்பு, ஒரு உண்மையான மனிதன் தனது தேவை, ஆசை, விருப்பம் மற்றும் சுதந்திரம் என அனைத்தையும் தன் குடும்பத்தின் முன் 2ம் பட்சமாகத்தான் வைப்பான் என்றும், உறவுகளில் காதல் சில நேரங்கள் குறையலாம். ஆனால் மரியாதை குறையாமல் இருக்க வேண்டும்...எனவும் குறிப்பிட்டுள்ளார். தன் குழந்தைகளை அன்போடு பார்த்துக் கொள்ளும் மனைவியை மதிப்பவன்தான் உண்மையான மனிதன்...என கூறியுள்ள குஷ்பு,

அப்படி நடந்து கொள்ளாதவன் சுயநலவாதி என்றும், சுயநலத்தால் ஒருவர் செய்யும் செயல்கள் பூமராங் போல அவரையே திரும்பத் தாக்கும் எனவும் கண்டனம் தெரிவித்துள்ளார்... குழந்தையின் தாயை மதிக்காத ஒரு மனிதன் மற்றவர்களின் மரியாதையை பெறவோ அல்லது வாழ்க்கையில் வெற்றி பெறவோ முடியாது என சாடியுள்ளார். குஷ்பு மறைமுகமாக ஜெயம் ரவியைத் தான் சாடுவதாக இணையவாசிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்