பற்றி எரியும் மல்லுவுட் பாலியல் தீ... குஷ்பூவின் ஒற்றை பேட்டியால் அதிரும் கோலிவுட்

x

ஹேமா கமிட்டி அறிக்கை போன்று தமிழகத்திலும் வரும் என நடிகை குஷ்பூ தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, மலையாள தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள தேசிய மகளிர் ஆணைய முன்னாள் உறுப்பினரும், நடிகையுமான குஷ்பூ, ஹேமா கமிட்டியின் அறிக்கையால் நடிகர்களின் தூக்கம் தொலைந்துள்ளதாகவும், அந்த அறிக்கை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே வந்திருந்தால் பல நடிகைகள் பாதுகாக்கப்பட்டிருப்பார்கள் என்றும் தெரிவித்தார். நடிகர் முகேஷ் விவகாரத்தை அரசியலாக்க வேண்டியதில்லை என கூறிய அவர், தமிழகத்திலும் ஹேமா கமிட்டி போன்ற கமிட்டி வரும் என்றார். இந்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரையும் கிரிமினல்கள் போன்று பார்க்கக் கூடாது என்றும், அதேநேரத்தில், தவறு செய்தவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். நடிகைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களில் அரசியல் இல்லை என்பதை அரசியலாக பார்க்க வேண்டாம் என்றும் நடிகை குஷ்பூ கேட்டுக்கொண்டுள்ளார். பாதிக்கப்பட்ட நடிகைகள், உடனடியாக இதுகுறித்து தெரிவித்திருந்தால், அடுத்து எந்த பெண்ணும் பாதிக்கப்படாமல் தடுத்திருக்கலாம் என்றும் அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்