நடிகை பலாத்கார வழக்கு... பிரபல நடிகர் மாயம்... 3 மாநிலங்களில் போலீசார் அதிரடி ரெய்டு

x

நடிகையை பலாத்காரம் செய்த வழக்கில் கேரள உயர்நீதிமன்றம் முன்ஜாமின் வழங்க மறுத்ததைத் தொடர்ந்து, நடிகர் சித்திக் தலைமறைவானார். கடந்த 3 நாட்களாக அவர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் முன் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். சித்திக்கை கைது செய்ய தீவிர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேரள டிஜிபி ஷேக் தர்வேஷ் சாகிப் உத்தரவிட்டுள்ளார். இதனால் சித்திக்கின் உறவினர் வீடுகள், கொச்சி மற்றும் பல்வேறு பகுதிகளில் காலியாக உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், நண்பர்களின் வீடுகள் உள்பட பல்வேறு இடங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். மாநில எல்லைகளிலும் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சென்னை, கோவை மற்றும் பெங்களூரு உள்பட பல்வேறு இடங்களில் சித்திக்கிற்கு நெருங்கிய நண்பர்கள் உள்ளதால், அவர்களது உதவியுடன் தலைமறைவாக இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இதனால் தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களிலும் கேரள போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்