நடிகை கவுதமி வழக்கு.. நீதிபதி நக்கீரன் அதிரடி உத்தரவு

x

நிலம் வாங்கி தருவதாக நடிகை கவுதமியை மோசடி செய்த விவகாரத்தில் அழகப்பன் என்பவர் தாக்கல் செய்த முன் ஜாமீன் வழக்கு ஜூலை 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் நிலம் வாங்கி தருவதாக கூறி

தம்மிடம் அழகப்பன் என்பவர் மோசடி செய்ததாக நடிகை கவுதமி அளித்த புகாரின் பேரில், அழகப்பன் மீது ராமநாதபுரம் குற்றபிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமின் வழங்க கோரி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அழகப்பன் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகை கவுதமி தாக்கல் செய்த இடையீட்டு மனு விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதி நக்கீரன், இது தொடர்பாக பதிலளிக்க ராமநாதபுரம் போலீசார் காலஅவகாசம் கோரியதால் வழக்கு விசாரணையை ஜூலை 4 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர். அதுவரை ஏற்கனவே வழங்கப்பட்ட இடைக்கால முன் ஜாமினை நீட்டித்து உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்