மறைந்த நடிகை சவுந்தர்யாவின் வாழ்க்கையை படமாக்க முயற்சி

x

தமிழ், தெலுங்கு, கன்னட திரையுலகில் கொடிகட்டி பறந்த நடிகை சவுந்தர்யா, கடந்த 2004-ஆம் ஆண்டில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இந்நிலையில் நடிகை சவுந்தர்யாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதையொட்டி சவுந்தர்யாவின் கதாபாத்திரத்தில் நடிக்க, நடிகை ராஷ்மிகா மந்தனா விருப்பம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள அவர், சினிமாவுக்கு வருவதற்கு முன்பே சவுந்தர்யாவின் தீவிர ரசிகை என்றும், சவுந்தர்யாவின் முகச்சாயல் தன்னிடம் இருப்பதாக பலர் கூறியிருப்பதாகவும் ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்