"வாழ்வாதாரத்தை நம்பியுள்ள குடும்பத்திற்கு வாய்ப்பு தாருங்கள்.." நடிகை தீபா-வின் உருக்கமான பேச்சு

x

கல்யாண வீடுகளில் நையாண்டி கேசட்டை போடாமல், கலைஞர்களுக்கு வாய்ப்பு தருமாறு திரைப்பட நடிகை தீபா சங்கர் கேட்டுக் கொண்டுள்ளார். கோவை சுங்கம் பகுதியில் உள்ள கலையகம் சார்பில் நாட்டார் கலை ஆட்டங்களுக்கான முதன்மை அரங்கம் திறக்கப்பட்டது. இதனை பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் திறந்து வைத்தார். சிறப்பு விருந்தினராக, நாட்டார் கலைஞரும் நடிகையுமான தீபா சங்கர் கலந்து கொண்டார். அப்போது பாட்டு பாடி, நாட்டுப்புற கலைகள் குறித்து விவரித்தார். தப்பாட்டம் என்பது சாவு வீட்டில் மட்டும் அடிக்கப்படும் என்று தப்பாக புரிந்துகொள்ளப்படுவதாக தீபா சங்கர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்