பிரபல நடிகரை தாக்கிய கொடிய உயிர்கொல்லி நோய்... "அப்பா ICU-வில் இருக்காரு" - ரசிகர்களுக்கு பேரிடி

x

பிரபல நடிகரை தாக்கிய கொடிய உயிர்கொல்லி நோய்... "அப்பா ICU-வில் இருக்காரு" - ரசிகர்களுக்கு பேரிடியை இறக்கிய மகள்

சின்னத்திரை ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான நடிகர் நேத்ரனுக்கு கேன்சர் இருப்பதாக அவரின் மகள் உருக்கமாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார்...

டிவி சீரியல்களில் கால் நூற்றாண்டை கடந்து இன்னும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருப்பவர் நடிகர் நேத்ரன்...

இவர் நடித்த சீரியல்கள் ஏராளம்... அதே நேரம் நடனத்திலும் கை தேர்ந்தவர்..

கேரளாவை சேர்ந்த தீபாவும் சீரியல் நடிகையாக இருந்த நிலையில் இவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நேத்ரன்..

இவர்களுக்கு அபிநயா, அஞ்சனா என 2 மகள்கள்.. இதில் அபிநயா தற்போது சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்க, 2 வது மகள் அஞ்சனா சினிமாவில் தன் தடத்தை பதித்திருக்கிறார்.. நடிப்பு, நடனம் என்றிருந்த நேத்ரனும் அவரது குடும்பமும் பல்வேறு ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டனர்...

கலைக்குடும்பமாக இருந்த இவர்கள் மீது யார் கண் பட்டதோ தெரியவில்லை... எப்போதும் பரபரப்பாக சுற்றி வரும் நேத்ரனுக்கு கேன்சர் என்ற நோய் தன் கோரத்தை காட்டியிருக்கிறது...

தற்போது ரஞ்சிதமே என்ற சீரியலில் நடித்து வரும் நேத்ரன், சமீப காலமாக அதில் இருந்து விலகியதாக தெரிகிறது. இந்த சூழலில் தான் தன் தந்தைக்கு கேன்சர் பாஸிட்டிவ் என்றும், அவர் குணம் பெற ரசிகர்களின் வேண்டுதல் அவசியம் என உருக்கத்தோடு வீடியோ வெளியிட்டு இருக்கிறார் அவரின் மூத்த மகள் அபிநயா..

அறுவை சிகிச்சை செய்த போதிலும் தந்தையின் கல்லீரல் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், உங்களின் வேண்டுதலால் ஏற்படும் பாசிட்டிவிட்டி தந்தையை நிச்சயம் குணப்படுத்தும் உன உருக்கத்தோடு கூறியிருக்கிறார் அபிநயா...

இவரின் இன்ஸ்டாகிராம் பதிவை பார்த்த பலரும் நேத்ரன் விரைவில் குணம் பெற வேண்டும் என்றே பதிவிட்டு வருகின்றனர்.

ரசிகர்களை மகிழ்விக்கும் ஒரு கலைஞனான நீங்கள் இந்த வலிகள், வேதனைகளில் இருந்து மீண்டு வருவீர்கள் நேத்ரன்...


Next Story

மேலும் செய்திகள்