நடிகை பாலியல் வழக்கில் சிக்கிய பரபரப்பு கடிதம் - புதிய திருப்பம்!

நடிகர் திலீப் உள்பட பலர் குற்றம்சாட்டப்பட்டுள்ள மலையாள நடிகையை காரில் கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
x
நடிகர் திலீப் உள்பட பலர் குற்றம்சாட்டப்பட்டுள்ள மலையாள நடிகையை காரில் கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சுனில்குமார், எர்ணாகுளம் சிறையில் இருந்து திலீப்புக்கு எழுதிய கடிதம் போலீசிடம் சிக்கி உள்ளது.

அதில், தான் செய்த தவறை ஒப்புக் கொண்டு நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்கப்போவதாகவும், சாட்சிகளையும், வக்கீல்களையும் எவ்வளவு விலை கொடுத்து வாங்கினாலும் உண்மையை மூடி மறைக்க முடியாது என்றும் குறிப்பிட்டிருந்தார். தன்னுடன் சிறையில் இருந்த சஜித் விடுதலையாகி செல்லும் போது திலீப்பிடம் கொடுக்க வேண்டும் என்று கூறி சுனில்குமார் அந்தக் கடிதத்தை கொடுத்து அனுப்பி உள்ளார். கடிதத்தின் ஒரு நகலை சுனில்குமார் தன்னிடம் வைத்திருந்தார். ஆனால் சஜித்தால் அந்த கடிதத்தை திலீப்பிடம் கொடுக்க முடியவில்லை.இந்த நிலையில் திலீப்புக்கு சுனில்குமார் சிறையில் இருந்து கடிதம் எழுதிய விவரம் போலீசுக்கு தெரியவந்தது. இதையடுத்து போலீசாரின் தீவிர விசாரணையில் அந்த கடிதத்தின் நகல் மட்டுமே கிடைத்தது.இதற்கிடையே திருச்சூர் அருகே குன்னம்குளத்தில் உள்ள சஜித்தின் வீட்டில் நேற்று போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் சுனில்குமார் எழுதிய கடிதத்தின் ஒரிஜினல் கிடைத்தது. இது நடிகை பலாத்கார வழக்கில் போலீசுக்கு கிடைத்த மிக முக்கிய ஆதரமாக கருதப்படுகிறது. இதனால் இந்த வழக்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்