குபு குபுவென எரிந்த பைக்..அலறியடித்து ஓடிய நபர்- இரவில் நடந்த திடுக்கிடும் சம்பவம்

Update: 2023-07-16 07:58 GMT

பாலக்காடு அருகே சென்றுக் கொண்டிருந்த இருசக்கர வாகனம், திடீரென தீப்பற்றி கொழுந்துவிட்டு எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் ஷொரனூர் பகுதியைச் சேர்ந்த கஷிவ் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது எஞ்சினில் இருந்து புகை வருவதை அறிந்த அவர், சுதாரித்துக் கொண்டு வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு விலகி நின்றுள்ளார். இதனைத் தொடர்ந்து வாகனம் முழுவதும் தீப்பற்றி கொழுந்து விட்டு எரிந்த நிலையில், சம்பவம் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்