மின்னல் தாக்கி அண்ணன், தங்கை, சித்தப்பா பலி - புதுக்கோட்டையில் சோகம் | pudukkottai | lightning

Update: 2022-11-15 03:50 GMT

புதுக்கோட்டை மாவட்டத்தில், மின்னல் தாக்கியதில், பள்ளி முடிந்து இரு சக்கர வாகனத்தில் வீடு சென்ற அண்ணன், தங்கை, சித்தப்பா மூவரும் உயிரிழந்தனர். புதுக்கோட்டை மாவட்டம், பறையூர் கிராமத்தைச் சேர்ந்த பழனிச்சாமியின் மகன் சஞ்சய்யும், மகள் சஞ்சனாவும், திருப்புவனவாசலில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தனர். மாலையில் பள்ளி முடிந்த பிறகு, இருவரையும் பழனிச்சாமியின் தம்பி இளையராஜா தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு அழைத்து வந்தார். சிங்காரக்கோட்டைக் கோயில் அருகே வந்தபோது மின்னல் தாக்கியதில் மூவரும் கீழே சாய்ந்தனர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், அவர்களை மீட்டு திருப்புனவாசல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர்கள் மூவரும் உயிரிழந்து விட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்