இளைஞர் உயிரை பறித்த இன்ஸ்டா ஸ்டேட்டஸ் - அதிர்ச்சி காரணம்

Update: 2024-09-27 02:46 GMT

ஜெய்ஹிந்த்புரம் ஜீவாநகர் 1-ஆவது தெருவை சேர்ந்த சூர்யா மற்றும் அவரது நண்பர்களுக்கும், அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த பிரவின்ராஜா மற்றும் அவரது

நண்பர்களுக்கும் இடையே, கடந்த 2 ஆண்டுகளாக தெருவிற்குள் யார் பெரிய ஆள் என்பதிலும் அடிக்கடி சண்டை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கடந்த 23 ஆம் தேதி ஜீவாநகரில் நின்றுகொண்டிருந்த சூரியாவை, பிரவின்ராஜா மற்றும் அவரது நண்பர்கள் Instagram ல எங்களுக்கு எதிராக STATUS போடுவயாடா என்று கூறி மறைத்து வைத்திருந்த வாளை எடுத்து கை, தலை, கால் என மாறி மாறி வெட்டியுள்ளனர். ஆபத்தான நிலையில் சிகிச்சைபெற்றுவந்த சூர்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் சூர்யாவை படுகொலை செய்ததாக பிரவின்ராஜா, காட்டுப்பூனை, லிங்கராஜா, மாதேஷ், சோமசுந்தரம்,, முகேஷ்குமார்,சதிஸ்குமார் மற்றும் ஒரு சிறுவன் என 8 பேரை கைது செய்தனர். இது, இரு தரப்பு மோதலா? ஜாதிய ரீதியான மோதலா என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்