மகனுடன் வயதான பெற்றோர் தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்

Update: 2024-09-29 07:29 GMT

இறுதிச் சடங்கு செய்வதற்கான பணத்தை வைத்து விட்டு மகனுடன் வயதான பெற்றோர்கள் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

தென்காசி மாவட்டம் ஆயக்குடியைச் சேர்ந்த முருகேசன் குடும்பத்துடன் வசித்து வந்தார். அருகில் உள்ள தொண்டு நிறுவனத்தில் முருகேசன் வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன் சாலை விபத்தில் சிக்கி இருக்கிறார். இதில் கண் பார்வை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வீடு திரும்பிய முருகேசன் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். இதனைத் தொடர்ந்து முருகேசன் விவசாய தோட்டத்தில் வசித்து வரும் தனது தாய் தந்தை வீட்டிற்குச் சென்று இருக்கிறார். அங்குத் தாய் சுடலை மாடத்தி மற்றும் தந்தை பரமசிவன் ஆகியோரிடம் தன்னை யாரும் சரியாகக் கவனிப்பதில்லை எனக் கூறி முருகேசன் அழுது இருக்கிறார். மகன் படும் அவஸ்தையைக் காண முடியாத பெற்றோர், மகனுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து முருகேசனுக்கு குருணை மருந்தைக் கொடுத்து விட்டுச் சுடலை மாடத்தி மற்றும் பரமசிவன் ஆகியோரும் குருணை மருந்தை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டனர். மேலும் தங்கள் மூவருக்கும் இறுதிச் சடங்கு செய்ய 50 ஆயிரம் ரூபாயை மாடத்தி தனது தலையணைக்குக் கீழே வைத்ததும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்