"தமிழகத்திற்கான நிதியை விடுவிக்க வேண்டும்" மக்களவையில் திமுக எம்.பி. வலியுறுத்தல்

தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 20 ஆயிரத்து 287 கோடி ரூபாயை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என திமுக எம்.பி. கதிர் ஆனந்த் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2022-03-30 13:34 GMT
தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 20 ஆயிரத்து 287 கோடி ரூபாயை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என திமுக எம்.பி. கதிர் ஆனந்த் வலியுறுத்தியுள்ளார். மக்களவையில் பூஜ்ஜிய நேரத்தில் பேசிய அவர், ஜிஎஸ்டி நிலுவைத்தொகை, நெல் அரவை மானியம், பிரதமர் ஆவாஸ் யோஜனா, உள்ளாட்சி அமைப்புக்களுக்கான நிதி உள்பட 38 இனங்களின் கீழ் 20 ஆயிரத்து 287 கோடி ரூபாய் நிலுவையில் இருப்பதாக தெரிவித்தார். உரிய நிதி ஒதுக்காமல் ஒரு மாநிலம் எப்படி அரசை நடத்த முடியும் என கேள்வி எழுப்பிய அவர் உடனடியாக நிதியை ஒதுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், கரிம பருத்தி உற்பத்தி அதிகரித்துள்ளதா என்பது குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார். 

Tags:    

மேலும் செய்திகள்