டீ மாஸ்டரை கன்னத்தில் அடித்த டிஎஸ்பி...

தூத்துக்குடியில் டீ நன்றாக இல்லை என்பதால் டீ மாஸ்டரை போலீஸ்காரர் கன்னத்தில் அடிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

Update: 2018-12-31 06:10 GMT
தூத்துக்குடியில் டீ நன்றாக இல்லை என்பதால் டீ மாஸ்டரை போலீஸ்காரர் கன்னத்தில் அடிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.  டிஎஸ்பி முத்தமிழ், காவலர் பொன்பாண்டி உட்பட காவல்துறை சேர்ந்த மூவர், தெய்வச்செயல்புரத்தில் உள்ள பேக்கரி கடையில் லெமன் டீ வாங்கியுள்ளார். அந்த, டீ நன்றாக இல்லை என்று கூறி டிஎஸ்பி முத்தமிழ், டீ மாஸ்டரை கனத்தில் அறைந்ததோடு, வண்டியில் ஏற்றிக்  கொண்டு கன்னத்தில் அடித்து அவதூறாக பேசியுள்ளார். பின்னர் புதுக்கோட்டை சுங்கச்சாவடியில்  டீ மாஸ்டரை இறக்கிவிட்டு சென்றுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்