"இதற்கு மேலும் 'இந்தி'யா? தாங்குமா இந்தியா? - வைரமுத்து கேள்வி

இந்தி குறித்த அமித்ஷா சர்ச்சை கருத்து வெளியிட்ட நிலையில், மொழி என்பது தேவை சார்ந்ததே தவிர திணிப்பு சார்ந்ததல்ல என்று கவிஞர் வைரமுத்து எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Update: 2022-04-09 07:38 GMT
இந்தி குறித்த அமித்ஷா சர்ச்சை கருத்து வெளியிட்ட நிலையில், மொழி என்பது தேவை சார்ந்ததே தவிர திணிப்பு சார்ந்ததல்ல என்று கவிஞர் வைரமுத்து எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், வடமொழி ஆதிக்கத்தால் தமிழர்கள் இழந்த நிலவியலும் வாழ்வியலும் அதிகம் என்று தெரிவித்தார். மேலும், இதற்கு மேலும் ஹிந்தியா? அதைத் தாங்குமா இந்தியா? என்று கேள்வி எழுப்பி "ஹிந்தி இம்போஷிஷன்" ஹேஷ் டேக் இட்டு வைரமுத்து பதிவிட்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்