அமித்ஷாவின் இந்தி குறித்த சர்ச்சை கருத்து... ரஹ்மான் செய்த சைலன்ட் சம்பவம்!

உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ஹிந்தி சர்ச்சைக்கு மத்தியில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் தமிழ் குறித்த பதிவு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Update: 2022-04-09 07:26 GMT
உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ஹிந்தி சர்ச்சைக்கு மத்தியில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் தமிழ் குறித்த பதிவு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. "ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியைப் பயன்படுத்த வேண்டும்" என்று அமித்ஷா தெரிவித்திருந்த கருத்து பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இந்நிலையில், இசையமைப்பாளர் ரஹ்மான் தனது சமூக வலைதளப் பக்கங்களில் தமிழ் குறித்த பதிவை வெளியிட்டுள்ளார். அதில், " தமிழ்த்தாய் "ழ"கர சூலம் ஏந்தி நடனமாடுவதைப் போன்ற படத்துடன்..."இன்பத் தமிழ் எங்கள் உரிமைச் செம் பயிருக்கு வேர்!" என்ற பாரதிதாசன் பாடல் வரிகளுக்குக் கீழ் தமிழணங்கு என்று இடம்பெற்றுள்ளது அனைவரையும் கவர்ந்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்