ஆஷிஷ் மிஸ்ரா ஜாமீனுக்கு எதிராக மனு விசாரணை திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு

லகீம்பூர்கிரி வன்முறை தொடர்பாக, ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமின் வழங்கியதற்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை திங்கட்கிழமைக்கு உச்சநீதிமன்றம் தள்ளி வைத்த‌து.

Update: 2022-03-30 13:49 GMT
லகீம்பூர்கிரி வன்முறை தொடர்பாக, ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமின் வழங்கியதற்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை திங்கட்கிழமைக்கு உச்சநீதிமன்றம் தள்ளி வைத்த‌து. இன்று விசாரணைக்கு வந்தபோது, ஜாமினை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து சிறப்பு விசாரணைக் குழுவின் தலைவர் உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளாரே? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு, அந்தக் கடிதங்களை தான் பார்க்கவில்லை என உத்தரப்பிரதேச அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சிறப்பு விசாரணை குழுவின் அறிக்கைகளுக்கு பதில் அளிக்கும் வகையில், விசாரணையை திங்கட்கிழமைக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்