சில்மிஷம் செய்த சங்க தலைவர் - கும்மாங்குத்து குத்தி, அடித்து துவைத்த பெண் - வைரலாகும் வீடியோ

ஆந்திராவில் சில்மிஷத்தில் ஈடுபட்ட பிற்படுத்தப்பட்டோர் சங்க முன்னாள் தலைவரை பெண் ஒருவர் அடித்து துவைத்த காட்சி இணையத்தில் பரவி வருகிறது.

Update: 2022-03-29 10:24 GMT
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் சங்க தலைவராக இருந்தவர் மங்களகிரிபட்டினத்தை சேர்ந்த ரங்கநாத். இவர் பணியில் இருந்த போது பெண் உறுப்பினர்கள் சிலரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதுதொடர்பாக வந்த புகாரின் பேரில் அவர் அந்த பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார். அதேநேரம் பணம் வாங்கி ஏமாற்றியது, சில்மிஷத்தில் ஈடுபட்டது என இவர் மீது மங்களகிரி மற்றும் தாடிபத்திரி காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டன. இந்த சூழலில் பெண் ஒருவரிடம் ரங்கநாத் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் நிலையில் அவர் தன் கணவருடன் ரங்கநாத் வீட்டிற்கு வந்து அவரை சரமாரியாக திட்டிக் கொண்டே அடித்து துவைத்தார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ள நிலையில் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்