கர்நாடகாவில் உலகிலேயே உயரமான இயேசு கிறிஸ்து சிலை அமைக்க திட்டம்
உலகிலேயே உயரமான இயேசு கிறிஸ்து சிலை அமைக்க கர்நாடக மாநிலத்தில் நிலம் ஒதுக்கப்பட்டதற்கு பாஜக தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கர்நாடக மாநிலம் ராமநகரம் மாவட்டத்தில் உள்ள கபாலபெட்டா மலையில் 114 அடி உயரம் கொண்ட இயேசு கிறிஸ்துவின் சிலை அமைப்பதற்காக நிலம் ஒதுக்கப்பட்டது. இதற்காக தனது சொந்த செலவில் 10 ஏக்கர் நிலத்தை அரசிடம் வாங்கி அதனை கிறிஸ்தவ மக்களுக்கு காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார் அன்பளிப்பாக வழங்கினார். இதற்கு மாநில பாஜக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். டி.கே.சிவக்குமார் தானமாக அளித்த இடம் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் என்றும் புகார் எழுந்துள்ளது.