ஆஸ்கர் விருது பெறுவதில் இடைநீக்கம் செய்யப்படுவாரா வில் ஸ்மித்?

நிகழ்ச்சி தொகுப்பாளரை அறைந்ததால் வில் ஸ்மித் மீது ஆஸ்கர் நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Update: 2022-03-31 11:08 GMT
நிகழ்ச்சி தொகுப்பாளரை அறைந்ததால் வில் ஸ்மித் மீது ஆஸ்கர் நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 94-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் நிகழ்ச்சியை தொகுப்பாளராக இருந்த கிறிஸ் ராக்கை, வில் ஸ்மித் கன்னத்தில் அறைந்தார். இந்த சம்பவத்தால் ஸ்மித் மீது ஆஸ்கர் குழு ஒழுங்கு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. கன்னத்தில் அறைந்ததும் அவரை நிகழ்ச்சியில் இருந்து வெளியேற கூறியதாகவும், அதற்கு வில் ஸ்மித் மறுப்பு தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொகுப்பாளரை அறைந்தது குறித்து எழுத்துப்பூர்வ பதிலளிக்க ஆஸ்கர் அகாடமி சார்பில் வில் ஸ்மித்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆஸ்கர் விருது பெறுவதில் இருந்து அவர் இடைநீக்கம் செய்யப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்