"இந்தியர்கள் சுயமரியாதைக்காரர்கள்"... திடீரென புகழ்ந்த இம்ரான் கான் - பின்னணி என்ன?

இந்தியர்கள் சுயமரியாதை கொண்டவர்கள், எந்த ஒரு வல்லரசு நாடும் இந்தியாவுக்கு கட்டளை இட முடியாது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் புகழாரம்...
x
இந்தியர்கள் சுயமரியாதை கொண்டவர்கள், எந்த ஒரு வல்லரசு நாடும் இந்தியாவுக்கு கட்டளை இட முடியாது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் புகழாரம் சூட்டியுள்ளார்.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இன்று நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் பிரதமர் இம்ரான்கான் நேற்று இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். நாட்டு மக்கள் வீதிகளில் இறங்கி போராட வேண்டும் என இம்ரான்கான் அழைப்பு விடுத்துள்ளார். மேலும், தனது அரசை கவிழ்க்க அமெரிக்கா முயற்சிப்பதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். உரையின் போது இந்தியர்கள் குறித்து குறிப்பிட்ட இம்ரான் கான், இந்தியர்கள் மிகவும் சுயமரியாதை கொண்டவர்கள். எந்த ஒரு வல்லரசு நாடும் இந்தியாவுக்கு கட்டளையிட முடியாது என்றார். அதேவேளை ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தங்கள் மற்றும் காஷ்மீருக்கு ஏற்பட்ட நிலை, ஆகியவற்றால் தான் ஏமாற்றமடைந்ததாகவும், அதனால் தான் இந்தியாவுடன் தாம் நட்புறவு மேற்கொள்ளவில்லை' எனவும் இம்ரான்கான் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்