தென்காசியில் இருந்து கிளம்பியதும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு காத்திருந்த பெரிய அதிர்ச்சி

x

செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு புதன்கிழமை இரவு பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. சங்கனாபேரி பகுதியில் ரயில் சென்ற போது தண்டவாளத்தின் நடுவே சுமார் 10 கிலோ எடை கொண்ட பெரிய கல் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. ரயில் ஓட்டுனர் சாமர்த்தியமாக ரயிலை ஓட்டி சென்றதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இது தொடர்பாக இஞ்சின் ஓட்டுனர் ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து ரயில்வே போலீசார், சம்பவ இடத்தை பார்வையிட்டு தண்டவாளங்களை ஆய்வு செய்தனர். செங்கோட்டை சென்னை- பொதிகை ரயிலை கவிழ்க்க மர்ம நபர்கள் சதியா? என்ற கோணத்தில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்