தென்னிந்திய ஊடகம், பொழுதுபோக்கு மாநாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

தொழில் துறையினர் சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சியில் பல்வேறு பிரபலங்கள் பங்கேற்பு.
x
தொழில் துறையினர் சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சியில் பல்வேறு பிரபலங்கள் பங்கேற்பு.

நடிகர்கள் ஜெயம் ரவி ,  ரமேஷ் அரவிந்த் ,  ஜெயராம் , நடிகை சுகாசினி , இயக்குனர் ராஜமவுலி , சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் ஆகியோர் முதல் நாள் அமர்வில் பங்கேற்ப்பு...

2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் இந்திய அளவில் தென்னிந்திய சினிமாவின் பங்களிப்பு , திரைப்படங்களில் தொழில்நுட்ப வளர்ச்சி , சமூக வலைதளங்கள் திரைப்படங்கள் மீது ஏற்படுத்தியுள்ள தாக்கம் , குறைந்த பட்ஜெடில் பெருமளவில் வெளியாகும் தரமான படங்களுக்கான அங்கீகாரம் வழங்குவது எப்படி , ஒடிடி தொழில்நுட்பத்தின் அடுத்த கட்ட வளர்ச்சி , பொதுமக்களை திரையரங்குகளை நோக்கி ஈர்ப்பது எப்படி உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

2 நாட்கள் நடைபெறக்கூடிய இந்த நிகழ்ச்சியில் 300 பல்வேறு திரைப் பிரபலங்கள் பங்கேற்று விவாதிக்க உள்ளனர்.

நாளை நடைபெறக்கூடிய நிகழ்வில் முன்னணி இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் , மணிரத்னம் , ஏ ஆர் முருகதாஸ் ஆகியோரும் , இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் பங்கேற்க உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்