இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 68 மீனவர்கள்...விடுதலை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

இது தொடர்பாக மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி அகில இந்திய மீனவர் அமைப்பு சார்பில் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
x
இது தொடர்பாக மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி அகில இந்திய மீனவர் அமைப்பு சார்பில் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதிகள் மீனவர்கள் எதற்காக எல்லை தாண்டி செல்கின்றனர் என்றும், இந்த விவகாரம் தொடர்பாக இலங்கை நீதிமன்றத்தை தான் அணுக வேண்டும் என்றும் கூறினர். மேலும், 68 மீனவர்களை விரைவில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க கோரி, இந்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்