"துபாய் பயணம் வெற்றிகரமாகவும், மகிழ்ச்சிகரமாகவும் அமைந்தது" - முதலவர் ஸ்டாலின்

4 நாட்கள் பயணமாக முதலமைச்சர் ஸ்டாலின் துபாய் சென்றிருந்தார்.
x
4 நாட்கள் பயணமாக முதலமைச்சர் ஸ்டாலின் துபாய் சென்றிருந்தார். அங்கு பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்ட அவர், தொழில் முதலீடுகளுக்கான ஒப்பந்தங்களை மேற்கொண்டார். இந்நிலையில், தனது துபாய் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், அதிகாலை 3 மணி அளவில் சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அவருக்கு வரவேற்பு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின், துபாய் பயணம் வெற்றிகரமாக அமைந்ததாகவும், 6 மிக முக்கிய நிறுவனங்களுடன், 6 ஆயிரத்து 100 கோடி ரூபாய் அளவுக்கு தொழில் முதலீடு ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்