"தப்பு செய்தவர்கள் தப்பிக்க முடியாது" "நீதிமன்றத்தை கடவுளாக நம்பியுள்ளேன்" - நடிகர் சூரி

நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை மீதான பணமோசடி புகாரளித்திருந்த நடிகர் சூரி, அந்த விவகாரம் குறித்து, 2 மணி நேரம் சாட்சியம் அளித்தார்.
x
சென்னையை அடுத்த சிறுசேரியில் நிலம் வாங்கி தருவதாக கூறிய நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும், முன்னாள் டிஜிபியுமான ரமேஷ் குடவாலா பண மோசடி செய்ததாக நடிகர் சூரி புகாரளித்தார். இந்த விவகாரத்தை விசாரிக்கும், மத்திய குற்றப்பிரிவுக்கு, 6 மாதங்களில் முடிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த வழக்குக்காக சம்மன் பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் மீனா முன்னிலையில் ஆஜரான நடிகர் சூரி, 2 மணி நேரம் சாட்சியம் அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பண விவகாரத்தில் ஏமாந்து உள்ளேன் என்றும், நிச்சயம் நியாயம் கிடைக்கும் எனவும், நீதிமன்றம் மற்றும் காவல்துறையை நம்பி உள்ளதாகவும் கூறினார். தப்பு செய்தவர்கள் தப்பிக்க முடியாது என்றும் நடிகர் சூரி தெரிவித்தார். இதையடுத்து நடிகர் விஷ்ணு விஷால், அவரது தந்தை ரமேஷ் குடவாலா விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்