மோடிக்கு அந்த கடவுளே பாடம் புகட்டிவிட்டார் - ராகுல் குற்றச்சாட்டு

x

தேர்தல் நெருங்கும் அரியானாவில் பிரசாரம் செய்த ராகுல் காந்தி, அரியானாவில் போதைப் பொருள் பழக்கம் அதிகரிப்பதாக குற்றம் சாட்டினார். குஜராத்தில் அதானி துறைமுகத்தில் ஆயிரம் கிலோ போதைப் பொருள் சிக்கியதில் இதுவரையில் யாராவது தண்டிக்கப்பட்டுள்ளார்களா? என கேள்வியை எழுப்பினார். சிறு வணிகர்களை ஒழித்துவிட்டு சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை இந்தியாவில் விற்பனை செய்ய மோடி அரசு விரும்புகிறது என்றவர், இதனால் சில தொழில் அதிபர்களும், சீனாவும் மட்டுமே பயன்பெறுகிறார்கள் என குற்றம் சாட்டினார். தன்னை நான் பயாலஜிக்கல் என்று அழைத்துக் கொளதோடு, கடவுளோடு நேரடியாக தொடர்பு இருப்பதாகவும் சொன்னார், ஆனால் கடவுளோ அயோத்தில் பாஜகவுக்கு தோல்வியை கொடுத்து மோடிக்கு தகுந்த பாடத்தை புகட்டிவிட்டார் என்று ராகுல் காந்தி கூறினார். மோடி, அம்பானிக்கும், அதானிக்கும் வழங்கிய பணத்தை எல்லாம் நாட்டிலிருக்கும் ஏழைகள், விவசாயிகள், பெண்கள் மற்றும் வேலையில்லா இளைஞர்களுக்கு வழங்கப்போவதாகவும் ராகுல் காந்தி உறுதியளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்