நாட்டை உலுக்கிய பெண் மருத்துவர் கொலை - தமிழக மருத்துவர்கள் கையில் எடுத்த ஆயுதம்

x

கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலையான சம்பவத்தை கண்டித்தும், இறந்த மருத்துவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில், மாணவ மாணவிகள் இரவில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.செங்கல்பட்டில், அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்கள் மற்றும் மருத்துவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து 200-க்கும் மேற்பட்டோர் பேரணியில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து, மெழுகுவத்தி ஏந்தியும் செல்போன் மூலம் டார்ச் அடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.உள்ள மதுரையில், அரசு மருத்துவமனைகளில் 1 மணி நேரம் புற நோயாளி பிரிவு சிகிச்சையை புறக்கணிப்பு செய்வதாக தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கம் அறிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்