"நாளை முதல் முக கவசம் கட்டாயமில்லை"

கொரோனா கட்டுப்பாடுகளை முழுமையாக நீக்குவதாக மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது.
x
இது குறித்து மும்பையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்றின் காரணமாக தொற்றுநோய் சட்டம் மற்றும் பேரிடர் சட்டம் அமலில் இருந்ததாகவும், அமைச்சரவைக் கூட்டத்தில் இவை ரத்து செய்யப்பட்டதாகவும் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே கூறியுள்ளார்.

இதன் மூலம் பயணங்களுக்கு கட்டாய தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும், முக கவசம் அணிதல் போன்ற அனைத்து கட்டுப்பாடுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டாலும் மக்கள் கவனக்குறைவாக செயல்பட வேண்டாமென்றும் முக கவசம் அணிவதை விருப்பத்தின் பேரில் தொடர வேண்டும் என்றும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் ராஜேஷ் தோபே கேட்டுக்கொண்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்