அசந்த நேரத்தில் செல்போனை ஆட்டைய போட்ட குரங்கு!

புதுச்சேரியில் பெண்ணிடமிருந்து செல்போனை கவ்விச்சென்ற குரங்கால் பரபரப்பு ஏற்பட்டது.
x
புதுச்சேரியில் பெண்ணிடமிருந்து செல்போனை கவ்விச்சென்ற குரங்கால் பரபரப்பு ஏற்பட்டது. உழவர் சந்தை அருகே இளநீர் விற்கும் பெண் தனது செல் போனை அருகில் வைத்திருந்தபோது குரங்கு ஒன்று அதனை வாயில் கவ்விச் சென்று மரத்தில் அமர்ந்தது. செல்போனை தூக்கிச்சென்று விளையாடிக் கொண்டிருந்த குரங்கிடம் இருந்து, நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு மொபைல் போன் மீட்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்