கணவன் வழியில் லேடி கேடி..! போலீசாரையே திகைக்க வைத்த நெட்ஒர்க்... சிக்கிய சீக்ரெட் பவுடர் கேங்

x

போதை மாத்திரை விற்பனை செய்து கணவர் சிறையில் உள்ள நிலையில், கணவன் சென்ற வழியைப் பின்பற்றி தானும் போதை மாத்திரைகளை விற்பனை செய்த மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளார்...

சென்னை எம்ஜிஆர் நகர் அண்ணா மெயின் தெரு பகுதியை சேர்ந்த சரவணன் என்கிற ஆர்ட்ஸ் சரவணன் இப்பகுதியில் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்ததாக ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ளார்... இந்நிலையில், அவரது மனைவி சரிதா போதிய வருமானம் இல்லாததால் தனது கணவர் வழியிலேயே போதை மாத்திரை விற்பனை செய்யத் திட்டமிட்டார்... கணவரின் நண்பர்களை வைத்து பெங்களூர் வரை சென்று வலி நிவாரணி மாத்திரைகளை வாங்கி வந்து விற்பனை செய்து வந்துள்ளார். வலி நிவாரணி மாத்திரைகளை போதைப் பொருளாக பயன்படுத்தும் வண்ணம் கேகே நகர் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், பள்ளிச் சிறுவர்களுக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில், போலீசார் விசாரணை நடத்தி சரிதாவைக் கைது செய்தனர்... அவரிடம் இருந்து 200 வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. போதை மாத்திரை விற்பனைக்கு உடந்தையாக இருந்த பூபதி, கார்த்திக், ராஜேஷ், ஈஸ்வர் ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்