ரூ.35 கோடி.. சிக்கிய குடி கெடுக்கும் பொருள்.. அதிர்ச்சியில் தீவுதேசம்

x

இலங்கையில் பியகம மற்றும் மஹரகம ஆகிய பகுதிகளில் போலீசார் தேடுதல் வேட்டையின் போது 35 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனர்.

பிரகாரம் பண்டாரவத்த பகுதியில் பேருந்து ஒன்றில் சோதனை செய்தபோது, ஹெரோயின் உள்ளிட்ட பல ரகங்களைச் சேர்ந்த போதைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கடுவலை - பொமிரிய பகுதியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். அதேபோல் மற்றொரு சோதனையில் போதைப் பொருட்களுடன் 3 பேர் சிக்கினர். கைது செய்யப்பட்டவர்கள் கடுவலை, அரலகங்வில மற்றும் சியம்பலாபே ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள். மஹரகம - நாவின்ன பகுதியில் நடந்த சோதனையில் ஒருவர் பிடிபட்ட நிலையில், அவரிடம் பெறப்பட்ட போதைப் பொருள்களின் மதிப்பு 16 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்