சீறி வரும் குண்டுகளுக்கு மத்தியில் சிங்கமாய் கடந்து வந்த பாட்டி

x

உக்ரைன் ரஷ்யா போர் தீவிரமாக நடந்து வரும் நிலையில், கடுமையான தாக்குதல்களுக்கு மத்தியில் 98 வயது உக்ரைன் மூதாட்டி ஒருவர் 10 கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்று தப்பியுள்ளார்... லிடியா ஸ்டெபானிவ்னா என்ற அந்த மூதாட்டி உணவு, தண்ணீர் இன்றி பலமுறை சோர்ந்து கீழே விழுந்தும் கூட கொஞ்சம் கூட மனம் தளராமல் 10 கிலோமீட்டர் தூரத்தை கைத்தடி உதவியுடன் நடந்தே கடந்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது... இப்போது ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள டொனெட்ஸ்கில் உள்ள ஓச்செரிடைனில் இருந்து உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை அடைய முயன்றுள்ளார். இறுதியாக உக்ரைன் ராணுவத்தால் கண்டுபிடிக்கப்பட்ட அவர், தொடர்ந்து போலீசில் ஒப்படைக்கப்பட்டு அவருக்கு தங்க இருப்பிடம் வழங்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்