பிறந்து 3 நாள் ஆன குழந்தைக்கு நடந்த பரிதாபம் - மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம்
பிறந்து 3 நாள் ஆன குழந்தைக்கு நடந்த பரிதாபம்
மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம்
#governmentgh #child #protest #thanthitv
தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே கோனூர் புதுத்தேர்வை பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவரின் மனைவி சீதாதேவிக்கு, கடந்த வியாழக்கிழமை இரவு பிரசவ வலி ஏற்பட்டு வீட்டிலேயே நீர் குடம் உடைந்துள்ளது. அதனைத் தொடர்ந்து தஞ்சை அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்ட சீதாதேவிக்கு, ஆண் குழந்தை பிறந்துள்ளது. மேலும் குழந்தைக்கு மூச்சு திணறல் இருந்ததால், அவசர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், 3 நாட்களாக குழந்தையை பெற்றோருக்கு காட்டவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி பச்சிளம் குழந்தை இறந்ததாக மருத்துவர்கள் கூறியதைக் கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்