ரவுடி கும்பலுக்குள் நடந்த மோதல்.. -சிக்கிய 4 பேர்- சென்னையை அதிர வைத்த சம்பவம்....

x

சென்னை புது வண்ணாரப்பேட்டையில் மது போதையில்

ரவுடிகளுக்குள் ஏற்ப்பட்ட மோதலில் நான்கு பேரை போலீசார்

கைது செய்தனர். தண்டையார்பேட்டையை சேர்ந்த பாம் முரளி சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் புது வண்ணாரப்பேட்டையில் மது அருந்தும் போது, மற்றொரு ரவுடியான மனோஜ் கும்பலுடன் தகராறு ஏற்ப்பட்டது. இதில் மனோஜ் கும்பல் தாக்கியதில் பாம் முரளி படுகாயமடைந்தார். இதில் மனோஜ் தப்பி ஓடி விட சம்பவ இடத்தில் இருந்த பாம் முரளி, முகேஷ் , விக்கி உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்